தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வியமைச்சின் அறிவித்தல்!

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வியமைச்சின் அறிவித்தல்!

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சு அறிவித்தலொன்று வெளியிட்டுள்ளது.

கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றால் தங்களது நிரந்தர பணியிடத்திலிருந்து, தற்காலிகமாக வேறொரு பாடசாலைக்கு இணைக்கப்பட்டு, குறித்த காலப்பகுதியை நிறைவுசெய்த அனைத்து தேசிய பாடசாலை ஆசிரியர்களும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமது நிரந்தர பணியிடத்தில் கடமையாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீண்டும் இணைப்புக் காலத்தை நீடிக்க விரும்பினால், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தமது நிரந்தர பணியிடத்திலிருந்து அதிபரின் பரிந்துரையுடன் மீள விண்ணப்பத்தை முன்வைக்க முடியும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.