நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது!

நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது!

வரலாற்றுப் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த நயினாதீவு நாகபூசணி அம்மன ஆலய வருடாந்த மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடாத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினரால் மகோற்சவத்தினை பிற்போட தீர்மானித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.