தொடர் இருமலால் அவதியா? இதனை போக்க இதோ சில எளிமையான வீட்டு வைத்தியம்!

தொடர் இருமலால் அவதியா? இதனை போக்க இதோ சில எளிமையான வீட்டு வைத்தியம்!

தற்போது அனைவரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனைதான் இருமல். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

இருமல் வர முக்கியமான காரணமாக கருதப்படுவது தூசு மற்றும் புகை, சளி காய்ச்சல், புகை பிடிப்பவகளை மட்டுமின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. அசுத்தமான தண்ணீரினால் கூட இந்த நோய் ஏற்படலாம்.

இருமல் இருக்கும் போது ஆரம்ப கட்டத்தில் கைவைத்தியம் செய்து குணப்படுத்திவிட்டால் எவ்விதப்பிரச்சினையும் இருக்காது.அந்தவகையில் இருமலை கட்டுப்படுத்து ஒரு சூப்பரான வைத்திய முறைகளை பற்றி இங்கே பார்ப்போம்.

  • துளசிசாறுடன் முருங்கைக்கீரை சாறு, கல் உப்பு, சிட்டிகை சுண்ணாம்பு கலந்து நன்றாக குழைத்து தொண்டை பகுதியில் பற்று போட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை செய்து வந்தால் இருமல் படிப்படியாக குணமாக கூடும்.
     
  • ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனில் திப்பிலி பொடியை குழைத்து வைக்கவும். கருப்பு வெற்றிலை ஒன்றை எடுத்து காம்பு நீக்கி மடித்து இந்த கலவையை நடுவில் வைத்து வெற்றிலையோடு சேர்த்து மெல்லவும். நன்றாக மென்று சாறை பொறுமையாக விழுங்கி விடவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடலாம். இதன் சாறு உள்ளே இறங்க இறங்க இருமல் படிப்படியாக குறையக்கூடும்.  
     
  • கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை, துளசி இவற்றின் இலைகள் தலா அரைகைப்பிடி எடுத்து சுத்தம் செய்து சாறு எடுக்கவும். பிறகு சித்தரத்தை, இஞ்சி துண்டு இரண்டையும் சிறுதுண்டு அளவு எடுத்து அதையும் இடித்து சாறு எடுக்கவும். இலைச்சாறு மற்றும் இஞ்சி சித்தரத்தை சாறு இரண்டையும் கலந்து 10 முதல் 20 சொட்டு வரை வயதுக்கேற்ப எடுத்து வைக்கவும். இதை வெண்ணெயில் குழைத்து காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் கட்டுக்குள் வரும். கபம் சார்ந்த இருமலுக்கு நல்ல மருந்து இது. குழந்தைகளுக்கு உண்டாகும் கணைச்சூடு குணமாகும்.
     
  •  உப்பு, மிளகு சேர்த்து காரச்சுவையும், உவர்ப்பு சுவையும் இருப்பதால் அதை தவிர்க்க நினைப்பவர்கள் கடுகை சிறிது நீரில் ஊறவைத்து மைய அரைத்து கால் டீஸ்பூன் அளவு எடுத்து அரை டீஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இரண்டு நாட்களில் பலன் தெரியும்.
     
  •   ஜலதோஷம், கபத்தால் வந்த இருமலுக்கும் தொண்டைப்புண்ணுக்கும் பார்லி அரிசி ஊறவைத்த நீரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை அப்படியே வைத்திருந்தால் அவை தெளிந்து மேலாக வரக்கூடும். பிறகு அதை தனியாக வெளியேற்றி அதி தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் கட்டுக்குள் வரும். தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் தொண்டை புண் ஆறக்கூடும். இருமலும் கட்டுப்படும்.
     
  •    குழந்தைகளுக்கு இருமல் தொடர்ந்து இருக்கும் போது இரவு நேரத்தில் தூங்க மாட்டார்கள். அவர்கள் இரவு தூங்கும் போது பேரீச்சம்பழம் எடுத்து நீள்வாக்கில் நறுக்குங்கள். உள்ளிருக்கும் விதையை எடுத்து கருமிளகு 2 அடைத்து 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அடுப்பை மிதமாக வைத்து அதில் பேரீச்சம்பழம் சேர்த்து சுண்ட காய்ச்சவும். சிறிது குங்குமப்பூ சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் வேகமாக மட்டுப்படும்.
     
  • வால்மிளகு  10 , அதிமதுர  சிறு துண்டு , சித்தரத்தை சிறு துண்டு , துளசி இலை கைப்பிடி அனைத்தையும் இரண்டு டம்ளர் நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இவை நன்றாக வெந்ததும் இலேசாக மத்தில் கடைந்து வடிகட்டி அதில்பனங்கற்கண்டு கலந்து விடவும். தினமும் இதை மூன்று வேளை குடித்து வந்தால் இருமல் படிப்படியாக கட்டுப்படும்.