கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 45 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 45 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 71 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,636 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

  • அரியலூர் - 23
  • செங்கல்பட்டு - 2,851
  • சென்னை - 22,374
  • கோவை - 548
  • கடலூர் - 410
  • தர்மபுரி - 54
  • திண்டுக்கல் - 358
  • ஈரோடு - 196
  • கள்ளக்குறிச்சி - 554
  • காஞ்சிபுரம் - 1,663
  • கன்னியாகுமரி - 438
  • கரூர் - 45
  • கிருஷ்ணகிரி - 118 
  • மதுரை - 3,486
  • நாகை - 184
  • நாமக்கல் - 26
  • நீலகிரி - 101
  • பெரம்பலூர் - 14
  • புதுக்கோட்டை - 247
  • ராமநாதபுரம் - 953
  • ராணிப்பேட்டை - 703
  • சேலம் - 869
  • சிவகங்கை - 288
  • தென்காசி - 273
  • தஞ்சாவூர் - 172
  • தேனி - 793
  • திருப்பத்தூர் - 184
  • திருவள்ளூர் - 1,744
  • திருவண்ணாமலை - 1,311
  • திருவாரூர் - 206
  • தூத்துக்குடி - 535
  • திருநெல்வேலி - 591
  • திருப்பூர் - 96
  • திருச்சி - 435
  • வேலூர் - 1,320
  • விழுப்புரம் - 487
  • விருதுநகர் - 670
  • விமானநிலைய கண்காணிப்பு 
  • வெளிநாடு - 207
  • உள்நாடு - 215
  • ரெயில் நிலைய கண்காணிப்பு - 97

மொத்தம் - 45,839