கொவிட்-19: பிரேஸிலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது!
பிரேஸிலில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 65 ஆயிரத்து 556பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 21,486பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 656பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர, அங்கு மொத்தமாக 16 இலட்சத்து 26 ஆயிரத்து 71பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 581,900பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8,318பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் 978,615பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.