ஸ்ரீலங்காவில் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை!

ஸ்ரீலங்காவில் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை!

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் ரஷ்ய நாட்டு பெண் ஒருவருக்கு தொல்லை கொடுத்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தனது முகப்பக்கத்தில் குறித்த பெண் இதுகுறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “தான் தனது 3 நண்பர்களுடன் காலி முகத்திடலில் பயணித்த போது 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று தங்களுக்கு தொல்லை கொடுத்தது.

அதிகளவு மதுபானம் அருந்தியிருந்த ஒரு இளைஞன் தன்னை தகாத வார்த்தையில் திட்டனார், அதற்கு எதிராக தலையிட முயன்ற எனது நண்பனுக்கும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த விடயம் கொழும்பு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.