திருந்தி வாழ ஆசைப்பட்டால் என்னிடம் வாருங்கள் : குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி

திருந்தி வாழ ஆசைப்பட்டால் என்னிடம் வாருங்கள் : குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி

பாடசாலை மாணவர்கள் இளைஞர்கள் அண்மைக்காலமாக கொரோனா அனர்த்த காலங்களில் குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

எனவே அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவ்வாறானவர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. எல். முஹம்மட் ஜெமில் தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (5) ஆலய உண்டியல் திருட்டு ஒலி பெருக்கி துவிச்சக்கரவண்டி போன்றவற்றை திருடி வந்த இளைஞர்களை எச்சரித்து ஆலோசனையுடன் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் நீங்கள் திருந்தி வாழ ஆசைப்பட்டால் அல்லது தொழில் வாய்ப்பு இன்றி இருந்தால் என்னை அணுகினால் உங்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க தயாராக இருக்கின்றேன்.

இளவயதில் ஒரு வேலையாட்களாக கூலியாளாக செல்லும் ஒரு இளைஞன் தற்போது பெயர் சொல்லுமளவு சமூகத்தில் முக்கிய நபராக உள்ளார்கள்.

அது மாத்திரமன்றி தற்போது நாட்டில் உலகில் உள்ள சில தலைவர்கள் பிரமுகர்களும் கூட கடந்த அவர்களது சிறுவயதில் தவறுகளை செய்து தண்டனை அனுபவித்தவர்கள்.

இன்று அவர்கள் திருந்தி உலகம் போற்றக்கூடிய நிலையில் பிரபல்யம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இளைஞர்கள் குற்றச் செயல்களில் சரியான வழிநடத்தல் இன்றி ஈடுபடுவது இயல்பு. ஆனால் அவ்வாறானவர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்.

இவர்கள் தொழில் நலிவுற்ற இருந்தால் நான் அவர்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க தயாராக இருக்கின்றேன்.

இவர்களுக்கும் ஒரு அழகான குடும்பம் எதிர்கால வாழ்க்கை உள்ளது என்பதை அவர்களுக்கு உணர வேண்டும்.அவ்வாறு உணர்ந்து கொள்ளும் இளைஞர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் சிகிச்சைகள் வழங்கி சமூகத்தில் நற்பெயரை பெற்றுக்கொடுக்க இயன்றவரை ஒத்துழைப்புகளை செய்ய தயாராக இருக்கின்றேன் என்றார்.