பொதுஜன முன்னணியின் புத்தளம் மாவட்டத்திற்கான மக்கள் பேரணி ஆரம்பம்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் புத்தளம் மாவட்டத்திற்கான மக்கள் பேரணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பமானது.
ஆனமடுவ-த.மு.தசநாயக்க விளையாட்டு மைதானத்தில் குறித்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
இதேவேளை, பொலனறுவை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் சந்திப்புகள் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றன.
பெதிவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து, அவர் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களிடமே நேரடியாக கலந்துரையாடி கேட்டறிந்தார்.