ஜிந்துபிடிய நபருக்கு கொரோனா தொற்று இல்லை- 5 முறை மேற்கொண்ட PCR பரிசோதனை

ஜிந்துபிடிய நபருக்கு கொரோனா தொற்று இல்லை- 5 முறை மேற்கொண்ட PCR பரிசோதனை

கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டி பகுதியில் கொரோனா தொற்றுறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த 154 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கொழும்பு மாநகர சபையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபுள்யு கே. சந்தரபால இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில் ஜிந்துபிடிய பகுதியில் கொரோனா தொற்றுடையவராக அடையாளம் காணப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

 

இறுதியாக மேற்கொள்ளப்பட்ட 5 பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் அவரின் உடலில் கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், அவருடன் நெருங்கிப்பழகிய நிலையில் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 154 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.