வாக்குசீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவு

வாக்குசீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து தேர்தல் மாவட்டங்களுக்குமான வாக்குசீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன.

அரச அச்சகர் கங்காணி கல்பனா லியனகேயின் தகவல்படி குறித்த வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளன.

தகவல்களின்படி நாடாளுமன்ற தேர்தலுக்காக 17 மில்லியன் வாக்குச்சீட்டுக்கள் அச்சிப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த வாக்குச்சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து அவை வாக்காளர்களுக்கு அனுப்பப்படுவதற்காக அஞ்சல் அலுவலகங்களில் ஒப்படைக்கப்படவுள்ளன.