எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்குச் சட்டமா?

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்குச் சட்டமா?

தற்போதுள்ள சூழ்நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டத்தை அமுல் செய்வது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதன்கிழமை இரவு 10 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4மணிக்கு தளர்த்தப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நாளையில் இருந்து ஒவ்வொரு நாளும் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4மணிவரையில் ஊரடங்குச்சட்டம் அமுல்செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதுவொருபுறமிருக்க நாளையிலிருந்து ஊரடங்குச் சட்டமானது முழுமையாக நீக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பில் அரசாங்கம் முழுமையான தகவல்களை இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.