எவ்ளோ நேரம் ஆனாலும் பரவால்ல… முழுக்கதையும் சொல்லுங்க – கார்த்தி போடும் புது கண்டீசன்!

நடிகர் கார்த்தி தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் முழு திரைக்கதையையும் கேட்க ஆரம்பித்துள்ளாராம்.

சுல்தான் படம் நன்றாக ஓடினாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கைதிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி, தேவ் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களுக்குமே நெகட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளன. இந்நிலையில் தன்னிடம் நன்றாக கதை சொல்லும் இயக்குனர்கள் அதை படமாக்கும் போது கோட்டைவிடுவதாக எண்ணும் கார்த்தி, இனிமேல் முழு திரைக்கதையும் கேட்டு அது தனக்கு பிடித்தால் மட்டுமே அந்த இயக்குனருக்கு ஓகே சொல்வது என்ற முடிவுக்கு சென்றுள்ளாராம்.