மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைக்க பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை

மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைக்க பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை

மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் மேற்கொள்ளப் விசேட சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 8,957 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன்போது குடிபோதையில் வாகன செலுத்திய 264 பேருக்கும் மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி வாகனம் செலுத்திய 295 பேருக்கும் எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.