சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு! சோகத்தில் மூழ்கியது மியன்மார்

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு! சோகத்தில் மூழ்கியது மியன்மார்

மியன்மார் – வடக்கு பகுதியில் பச்சை மரகத கல் அகழ்வு இடம்பெறும் ஜாட் சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியான தொழிலாளர்கள் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கனமழை காரணமாக ஏற்கனவே குறித்த நிலப்பகுதி ஈரமாக இருந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக சுமார் 50 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.