லண்டனில் இலங்கைப் பெண்ணால் சிறுமிக்கு நடந்த கொடூரம்! வெளிவந்த முக்கிய தகவல்கள்

லண்டனில் இலங்கைப் பெண்ணால் சிறுமிக்கு நடந்த கொடூரம்! வெளிவந்த முக்கிய தகவல்கள்

லண்டனில் தன் மகளை கத்தியால் குத்திவிட்டு, இலங்கைப் பெண் ஒருவர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து அங்கிருப்பவர்கள் கூறுகையில்,

“குறித்த வீட்டில் இருந்து சிறுவன் ஒருவன் ஆம்புலன்சிற்காக வெளியே அழுது கொண்டே ஓடிவந்ததாக கூறியுள்ளனர்.

என்.ஹெச்.எஸ் மருத்துவ உதவியாளரான Elsa Gonzales என்ற 47 வயது பெண், உதவ ஓடிய போது, வீட்டில் இறந்து கிடந்த மகளுக்கு அருகில் Sutha Karunanantham ரத்த குளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, நடுங்கியுள்ளார்.

அதில் குழந்தை மீது போர்வை போர்த்தப்பட்டிருந்தது. என்னை பொறுத்தவரை அவள் அப்போதே இறந்துவிட்டாள். அவளை நன்றாக கவனித்த போது, தொண்டையில் காயங்கள் இருந்தன.

இது பார்க்கும் போது ஒரு திகில் போன்று, காட்டுமிராண்டித்தனமாக இருந்ததாக” கூறியுள்ளார்.

அருகில் வசிக்கும், Riza Marfilla(55) கூறுகையில்,...

”சிறுமியின் இறந்து கிடந்த சடலத்தில் இருந்து சற்று தொலைவில், 12 அங்குலம் கொண்ட ரொட்டி கத்தியைக் கண்டேன்.

முதலில் நான் அவள் தூங்குகிறாள் என்று நான் நினைத்தேன், ஆனால் படுக்கைக்கு அருகில் நிறைய ரத்தமும் இருந்தது. இதைக் கண்டதால் நாள் முழுவதும் இதை நினைத்து நடுங்கினேன் என்று கூறியுள்ளார்.

இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள், ஐந்து ஆண்டுகளாக குறித்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.” என்றார்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்...,

“இது தொடர்பாக விசாரணை துவங்கப்பட்டுள்ளது. Sutha Karunanantham ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொலிசார் சிலர் மருத்துவமனையில் இருக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் தேடவில்லை, குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனை விரைவில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளனர்.

மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற Sutha Karunanantham-க்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் என்பதால், அழுது கொண்டே ஒடி வந்தது, அவரின் மகனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பின்னணி..

பிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் நெடுங்கேணியைச் சேர்ந்த இளவயது தாய்.

இந்த சம்பவத்தில் சயனிகா(வயது04 ) என்ற சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

அதேவேளை தற்கொலைக்கு முயன்ற தாயாரான சுதா என்பவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தையின் இளஞ் சிவப்பு சைக்கிள் மலர் அஞ்சலிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாய் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தனக்கு கான்சர் எனும் மாறாநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அடிக்கடி உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.

தனது உயிருக்கு ஏதாவது நடந்தால் என் பெண் பிள்ளையை யார் கவனிப்பார்களோ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவேளை நான் இறந்தாலும் என் மகளையும் என்னுடனேயே கூட்டிச்செல்வேன் என உறவினர்களிடம் சொல்லுவாராம்.

இந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.