தேர்தல் ஒத்திகைக்கான திகதியை வெளியிட்டார் மகிந்த தேசப்பிரிய

தேர்தல் ஒத்திகைக்கான திகதியை வெளியிட்டார் மகிந்த தேசப்பிரிய

கொரோனா தொற்றுக்கு மத்தியில் எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பதை அறிய சில கிராமங்களில் தேர்தல் ஒத்திகை நடைபெறுமென தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இத்தகைய முன்மாதிரி செயற்பாடுகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் அச்சறுத்தலான சூழ்நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவது சாதகமானதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அணுகுமுறைகளுடன் தேர்தலை நடத்த முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். இதற்கான பரீட்சார்த்த செயற்பாடாகவே தேர்தல் ஒத்திகை அமையவுள்ளது.

தேர்தல் நடைபெற்றால் வாக்களிப்பு நிலையத்துக்கு வரும் வாக்காளர்களே எழுதுகருவிகளை கொண்டுவர வேண்டுமென அவர் வலிறுயுத்தியுள்ளார்.