முகநூல் பதிவால் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

முகநூல் பதிவால் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ஆயுதம் தாங்கிய புகைப்படம் ஒன்றினை தனது முகநூலில் பதிவேற்றியதால் பயங்கரவாத விசாரணை பிரிவால் 02 ஆம் மாடியில் மூன்று மணிநேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் விசாரணைக்கு சென்று வந்த இளைஞன் இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

அண்மையில் வவுனியாவிலுள்ள அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அணித்தலைவருடைய ஆயுதம் தாங்கிய புகைப்படம் ஒன்றினை எனது முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் எனக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி பயங்கரவாத விசாரணை பிரிவின் 02 ஆம் மாடிக்கு நேற்று காலை 09 மணிக்கு அழைக்கப்பட்டு பிற்பகல் 12 மணி வரையான மூன்று மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த புகைப்படம் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளமை குறித்தும், அச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளவர்களின் விபரங்களும் விசாரணைகளின் போது மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.