அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர விபத்து! ஸ்தலத்திலேயே பலர் பலி

அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர விபத்து! ஸ்தலத்திலேயே பலர் பலி

அமெரிக்கா- கலிபோர்னியா மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

அமெரிக்கா -மெக்சிகோ எல்லைக்கு அருகே நேற்று காலை 25 பேருக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கார் மீது டிரக் ஒன்று மோதிள்ளது

இதில் 13 பேர் பலியானார்கள் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கார் ட்டிரைவர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஏனையர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.