12வது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை... கை வழுகி கீழே விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சி

12வது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை... கை வழுகி கீழே விழுந்த பதைபதைக்க வைக்கும் காட்சி

வியட்நாம் நாட்டில் 12 மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தையை சாரதி ஒருவர் சாமர்த்தியமாக காப்பாற்றியுள்ள பதற வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

Nguyen Ngoc Manh(31) என்ற இளைஞர் Hanoi பகுதியில் ஒரு வீட்டிற்கு வந்த பார்சலை வழங்குவதற்கு காத்திருந்துள்ளார். அப்பொழுது எதிரே இருந்த மாடியில் குழந்தை தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை அவதானித்த சிறிதும் தாமதிக்காமல் காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் குழந்தை மாடியின் பால்கனியில் இருந்து கீழே விழுந்த தருணத்தில் குறித்த இளைஞர் மிகச்சரியாக தனது மடியில் அந்த குழந்தையைத் தாங்கியுள்ளார்.

இதுகுறித்து குறித்த இளைஞர் கூறுகையில், நான் எதிரே வண்டியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த போது குழந்தை அழுது தொங்கிக்கொண்டிருந்ததை அவதானித்தேன்.

சிறிதும் தாமதிக்காமல் சாலையைக் கடந்து, உடனே அங்கிருந்து செட் ஒன்றின் கூரையின் மீது ஏறி மிகச்சரியாக குழந்தையை பிடிப்பதற்கு தயாராக இருந்தேன். அத்தருணத்தில் குழந்தை எனது மடியில் வந்து விழுந்தது.

குழந்தையின் இடுப்பு பகுதி சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறியுள்ளார்