கோட்டாபயவை நெகிழ்ச்சியடைய வைத்த சிறுமி! உடனடியாக வழங்கப்பட்ட பதில்

கோட்டாபயவை நெகிழ்ச்சியடைய வைத்த சிறுமி! உடனடியாக வழங்கப்பட்ட பதில்

னாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சிறுமி ஒருவர் எழுதிய கடிதத்திற்கு பதிலினை தனது முகப் புத்தகத்தில் ஜனாதிபதி வெளியிட்டிருக்கிறார்.

தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா நெருக்கடியிலிருந்து ஸ்ரீலங்காவை பாதுகாப்பதற்கு ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டியும் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு நன்றியை தெரிவிக்கும் வகையிலும் சிறுமி தனது கடிதத்தை எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் அக்கடிதத்திற்கு பதில் எழுதியுள்ள ஜனாதிபதி,

அன்புள்ள ரோஹன்சா மகளுக்கு,

மகளே, முதலில், நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கு நான் செய்த சேவையைப் பாராட்டியதற்கு நன்றி. உங்கள் பங்களிப்புகள் COVID-19 சமூக பாதுகாப்பு நிதிக்கு அனுப்பப்பட்டிருப்பதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். உங்களைப் போன்ற குழந்தைகளிடம் எம் தாய்நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்படுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஜனாதிபதியாக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உங்களைப் போன்ற வருங்கால சந்ததியினர் வாழ்வதற்கு தகுதியான சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சியைக் கொண்ட ஒரு நாட்டை உருவாக்க நான் பயன்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன்.

குழந்தைப் பருவம் என்பது நம் வாழ்வின் மகிழ்ச்சியான காலங்களில் ஒன்றாகும். நீங்கள் அதனை முறையான கல்வியை பெறுவதற்கும் உங்களது திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தி இலங்கையின் பெயரை சர்வதேச அளவில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தக்கூடிய புதுமைகளை நீங்கள் தேட வேண்டும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

நம் நாட்டை நேசிப்போம். நமக்கு வரும் அனைத்து தடைகளையும் வெற்றி கொள்வோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமி தனது கடிதத்திற்கு மேலதிகமாக கொரோனா நிதியாக சேகரித்த பணத்தையும் அதனுடன் அனுப்புவதற்கு சிறுமி நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.