ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க செயற்கோளை ஏவியது ரஷ்யா!

ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க செயற்கோளை ஏவியது ரஷ்யா!

ஆர்டிக் கண்டத்தில் நிகழும் சுற்றுச்சூழல் மாற்றத்தை கண்காணிப்பதற்காக ரஷ்ய விண்வெளிஆய்வு மையம் ஆர்க்டிகா- எம் என்ற செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆர்டிக் கண்டத்தில் பாரிய பனிப்பாறைகள் உருகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில் ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ரஷ்ய விண்வெளிமையம் ஆர்க்டிகா- எம் என்ற செயற்கைகோளை உருவாக்கியது.

கசக்ஸ்தானிலுள்ள பைக்கோனூர் ஏவுதளத்தில் இருந்து, சோயூஸ் விண்வெளி ஓடத்தின் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைகோள் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய விண்வெளிமைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்