உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எந்த இடத்தில் இருக்ககூடாது? இருந்தால் என்னென்ன விபரீதம் நடக்கும் தெரியுமா?

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எந்த இடத்தில் இருக்ககூடாது? இருந்தால் என்னென்ன விபரீதம் நடக்கும் தெரியுமா?

செவ்வாய் கிரகம் பகவானால் ஏற்படக்கூடிய தீமைகள் விபரீத விளைவுகளை உண்டு செய்பவையாக இருக்கும்.

அந்த வகையில் ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எங்கு இருப்பது? ஆபத்தான பலன்களைக் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

செவ்வாய் பகவான் உச்சம் பெற்று இருக்கும் பொழுதும், நீசம் பெற்று இருக்கும் பொழுதும் அவருக்குரிய வழிபாட்டை செய்து விட்டால் ஜாதகக்காரர்கள் தப்பித்துவிடலாம்.

செவ்வாயால் ஏற்படும் தோஷம், அதே செவ்வாய் தோஷத்தால் முறியடித்து விடலாம். இதுபோல செவ்வாயால் வரக்கூடிய பிரச்சனைகளை பற்றி தான் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மேலும், செவ்வாயால் கிடைக்கக்கூடிய நன்மைகளை விட, அது செய்யும் தீமைகள் மனிதனை நிலைகுலைய செய்துவிடும். ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் அமைந்து விட்டால் அவருடைய வாழ்நாளில் ஒருமுறையாவது உடலில் வெட்டுக் காயத்தை வாங்கிக் கொள்வான்.

இதனால், லக்னத்தில் செவ்வாய் இருப்பது மிகவும் மோசமான பலன்களை கொடுக்கும். தீராத நோய் தாக்கம், பெற்றோர்கள் இடத்தில் அன்பு இல்லாமல் இருக்கும்.

மேலும், ஒருவிதமான பயத்துடனும், சுய நலத்துடனும் இருப்பார்கள். நெருப்பினால் ஆபத்து ஏற்படலாம். தலையில் காயம் ஏற்படும். கண்பார்வை பாதிப்புகள் உண்டாகும்.

உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைப்பதில் பிரச்சினைகள் உண்டாகும். எதையும் மனதில் போட்டு வைத்துக்கொள்ள தெரியாமல் வெளிப்படையாக பேசுவதால் பல இடங்களில் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.

4- செவ்வாய் அமைந்திருந்தால் உடல் ஆரோக்கியம், இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தாயுடைய சாபத்தை வாங்கிக் கொள்வீர்கள்.

உறவினர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்வார்கள். கல்வியில் மந்தநிலை இருக்கும். செல்வ செழிப்பு உடையவர்களாக இருந்தாலும் நிம்மதி கெடும்

ஜாதகத்தில் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் இருந்தால் சந்ததிகள் உருவாவதில் பிரச்சனை நீடிக்கும். ஆறாம் இடத்தில் இருந்தால் பகைவர்கள் தொல்லை அதிகமாக இருக்கும்.

மேலும் ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படும். ஏழாமிடத்தில் இருந்தால் திருமண பந்தத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

திருமணத்தில் நிம்மதி என்பது இருக்காது. பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் விவாகரத்து நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.