இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் இன்றைய தினம் இரண்டு கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

 

பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இரண்டு பேரே கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,039 ஆக அதிகரித்துள்ளது.

 

இந்தநிலையில் கொவிட்-19 தொற்றுறுதியான 348 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதனிடையே, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியால் பீடிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 17 பேர் குணமடைந்துள்ளனர்.

 

இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.