பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டது

பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டது

அஞ்சல் வாக்கு ஆவண விநியோக முறைமை மாற்றம் தொடர்பில் கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

UPDATE.........

அஞ்சல் வாக்கு ஆவண விநியோக முறைமை மாற்றத்திற்கு எதிராக கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருவதாக இலங்கை அஞ்சல் சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் மகிந்த தெரிவித்துள்ளார்.

அஞ்சல் வாக்கு ஆவண விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இதற்கு முன்னர் கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் கடிதங்கள் மற்றும் பொதிகள் தற்போது லட்சக்கணக்கில் தேங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.