யாழில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் விழித்து பார்த்த போது காத்திருந்த ஏமாற்றம்!

யாழில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் விழித்து பார்த்த போது காத்திருந்த ஏமாற்றம்!

யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்று உடைக்கப்பட்டு 14 பவுன் நகை திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஏழாலை - களவாடை அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்று இன்று அதிகாலை திருடர்களினால் உடைத்து திருடப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்து 14 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்து எழும்பி பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு நகைகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.