த பினேன்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான ஓர் விசேட செய்தி....!

த பினேன்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான ஓர் விசேட செய்தி....!

த பினேன்ஸ் நிறுவனத்தின் அனைத்து வைப்பாளர்களுக்கும் எதிர்வரும் 07ஆம் திகதி முதல் இழப்பீடு வழங்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்தள்ளது.

அதன்படி அனைத்து வைப்பாளர்களுக்கும் 06 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது குறித்த மேலதிக விடங்களை 011 23 98 788, 011 24 77 261  என்ற இலங்கை மத்திய வங்கியின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தியும் மற்றும் 011 24 81 594 , 011 24 81 320 என்ற மக்கள் வங்கியிளன் தொலைபேசி இலக்கங்களுக்க அழைப்பினை ஏற்படுத்தியும் அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.