சமூகப் பணியில் குதித்துள்ள முல்லைத்தீவு இளைஞர்கள்!

சமூகப் பணியில் குதித்துள்ள முல்லைத்தீவு இளைஞர்கள்!

முல்லைத்தீவில் இயற்கை அரண்கள் எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் உறுப்பினர்களால் இன்றைய தினம் சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் அ.த.க பாடசாலையில் குறித்த சிரமதானப் பணிகள் காலை 08.30 மணி முதல் இடம்பெற்றது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த பல நாட்களாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், குப்பை கூழங்களாக இருந்த பாடசாலைச் சூழலை சுத்தம் செய்யும் செயற்பாட்டை இந்த அமைப்பு முன்னெடுத்திருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்களை பாதுகாத்து இயற்கையின் இருப்பை பேணுதல் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இயற்கை விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டங்களை விழிப்புணர்வு மூலம் மேம்படுத்துதல், பாடசாலைகளை சுத்தம் செய்தல், கனிய வளங்கள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.