வாகன விபத்தில் 9 பேர் காயம்

வாகன விபத்தில் 9 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ நுழைவாயிலுக்கும் அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் காலி - கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவர்களில் மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியாசலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த மகிழூர்ந்து ஒன்று சிற்றூந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.