தாய் நாட்டின் மீது அந்நியர்கள் கை வைக்க முடியாது – நரேந்திர மோடி

தாய் நாட்டின் மீது அந்நியர்கள் கை வைக்க முடியாது – நரேந்திர மோடி

இந்திய தாய் நாட்டின் மீது அந்நியர்கள் கை வைக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “லடாக்கில் இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட இடங்கள் மீது கண் வைத்தவர்களுக்கு  பொருத்தமான பதிலடி அளிக்கப்பட்டுள்ளது. கால்வனில் வீர மரணம் அடைந்த 20 இராணுவ வீரர்களின் தியாகம்  இந்திய தாய் நாட்டின் மீது அன்னியர் கை வைக்க முடியாது என்பதை நிரூபித்து காட்டியுள்ளது.

அவர்களின் வீரமே இந்தியாவின் பலமாக உள்ளது.  நாடு வீரர்களுக்கும், வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலை வணங்குகிறேன். நல்ல அண்டை நாடாக நட்பை பராமரிக்கத் தெரிந்த இந்தியாவுக்கு,  மற்றவர்களுக்கு உரிய பதிலடியை கொடுக்கவும் தெரியும்.

லடாக்கில் சீனா நடத்திய அக்கிரமத்தால் இந்தியர்கள் அனைவரும் ஆத்திரமடைந்துள்ளனர்.  சீனப் பொருட்களை புறக்கணிப்பது என்று தீர்மானித்ததன் மூலம் சீனாவுக்கு பொருளாதாரப் பின்னடைவையும் இந்திய மக்கள் ஏற்படுத்தி உள்ளனர்”  எனத் தெரிவித்துள்ளார்.