திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம்!

திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம்!

நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவலால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறக்க நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதற்கட்டத்தின் கீழான பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவம், கல்விசாரா ஊழியர்கள் போன்றோர் ஆகியோருக்காக அன்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்படவிருப்பதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்தார்.


இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தொற்று நீக்கம் செய்தல், தூய்மைப்படுத்துதல், பாடங்களுக்கான நேர அட்டவணை தயாரித்தல் போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அன்றைய தினத்தில் தரம் 5ஆம், 11ஆம், 13ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வது அவசியமாகும் என்றும் பத்தாம், 12ஆம் தரங்களில் கற்கும் மாணவர்கள் ஜூலை மாதம் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.