உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை

உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை

எதிர்வரும் தேர்தலை கருத்திற் கொண்டு ஒட்டப்பட்டுள்ள சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் என்பவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவற்துறைமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

சகல பிராந்தியங்களுக்கும் பொறுப்பான பிரதி காவற்துறைமா அதிபர்களின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி நாட்டின் சகல காவற்துறை நிலையங்களும் உள்ளடக்கும் வகையில் விஷேட வீதித் தடை, நடமாடும் சுற்றி வளைப்பு என்பவற்றை மேற்கொண்டு வேட்;பாளர்கள் பயணிக்கும் வாகனத்தை தவிர ஏனைய வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட வேண்டும் என காவற்துறை தெரிவித்துள்ளது.

 

அத்துடன் வீதி இரு மருங்கிலும் பொது இடங்களில் சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் தேர்தல் பிரசார பதாதைகள் என்பன அகற்றப்படும் என காவற்துறை மா அதிபர் வழங்கியுள்ளார்.