கொவிட் 19: மேலும் 2 பேர் பலி...!

கொவிட் 19: மேலும் 2 பேர் பலி...!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 431 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60694 ஆக அதிகரித்துள்ளது.