இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்டார் அமைச்சர்

இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்டார் அமைச்சர்

இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவிற்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மற்றுமொரு அமைச்சர் தன்னை சுயதனிமைப்படுத்தியுள்ளார்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வனஜீவராசிகள் அமைச்சருமான சி.பி.ரத்நாயக்க, இன்று முதல் தனது இல்லத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி வலப்பனையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ வருகைதந்திருந்த நிலையில் அந்நிகழ்வில் கலந்துகொண்ட காரணத்தால் அமைச்சர் பி.சி.ரத்நாயக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.