யாழில் வாயை கட்டிவிட்டு வீட்டை சல்லடை போட்ட கொள்ளைக் கும்பல்!

யாழில் வாயை கட்டிவிட்டு வீட்டை சல்லடை போட்ட கொள்ளைக் கும்பல்!

யாழ் சித்தண்கேணி பகுதியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் அவர்களை அச்சுறுத்தி தாக்கி விட்டு 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளது.

நேற்றையதினம் இரு வயோதிபப் பெண்கள் மட்டும் வதியும் வீடொன்றில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

நள்ளிரவு வேளையில் கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் இருவரும் அங்குள்ள பெண்கள் இருவரையும் மிரட்டியதுடன் ஒருவரை வீட்டு வளாகத்துக்குள் உள்ள கோவிலில் போய் அமருமாறு கூறியுள்ளனர்.

மற்றைய வயோதிபப் பெண் கூக்குரலிட்டதால் அவரது வாயை துணியால் கட்டிவிட்டு வீட்டை சல்லடை போட்டு கொள்ளைக் கும்பல் தேடுதலை மேற்கொண்டுள்ளது.

அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு விட்டு வேறு நகைகள் இருந்தால் தரும்படி கேட்டு வாயைக் கட்டிய வயோதிபப் பெண்ணைத் தாக்கியுள்ளனர்.

கொள்ளையர்களுக்கு அஞ்சி போத்தல்களில் போட்டு வைத்த நகைகளையும் அந்தப் பெண் எடுத்துக் கொடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் தடயவியல் பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.