பட்டப்பகலில் நடந்த கொடூரம்! இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு கையை துண்டாடிச் சென்ற கோரச் செயல்

பட்டப்பகலில் நடந்த கொடூரம்! இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு கையை துண்டாடிச் சென்ற கோரச் செயல்

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவரை கொலை செய்துவிட்டு அவரது கையினைத் துண்டாடிச் சென்று வேறொரு இடத்தில் வீசிச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மிடியாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மிடியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் நேற்று இளைஞரொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இனந்தெரியாத நபர்கள் சிலர் உயிரிழந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதுடன், இளைஞனின் ஒரு கையை துண்டித்து எடுத்துச் சென்று மிடியாகொட நான்காவது சந்தி பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். மிடியாகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மிடியாகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.