சற்று முன்னர் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள்

சற்று முன்னர் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள்

திக்வெல்ல பகுதியிலுள்ள யோனகபுர மேற்கு மற்றும் யோனகபுர கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் உறுதிபடுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதற்கமைய இன்று மாலை 6 மணி முதல் குறித்த கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.