லிபியாவில் படகு விபத்து! 43 அகதிகள் உயிரிழப்பு

லிபியாவில் படகு விபத்து! 43 அகதிகள் உயிரிழப்பு

லிபியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 43 அகதிகள் பலியாகியுள்ளனர்.

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ‌ஷவையா நகரில் இருந்து, படகு ஒன்றில் அதிகளவான அகதிகள் பயணம் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த படகு புறப்பட்டு சில மணிநேரம் பயணித்த நிலையில், திடீரென இயந்திரம் பழுதானதால், படகு நடுக்கடலில் கவிழ்ந்ததுள்ளது.

விபத்தில் 43 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

படகில் அதிகளவானவர்கள் பயணித்தமையே இவ்விபத்துக்கு காரணமென சந்தேகிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மத்திய தரைக்கடல் பகுதியில் படகு கவிழ்ந்து அகதிகள் உயிரிழந்தது இதுவே முதல்முறை என்பதுடன், ஏற்கனவே இப்பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் பலமுறை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.