அம்பாறையில் இரவுவேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம்! சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவம் மற்றும் பொலிஸார்

அம்பாறையில் இரவுவேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம்! சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவம் மற்றும் பொலிஸார்

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபத்தில் வீதியில் சென்ற 3 வாகனங்கள் சேதமடைந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கட்டையடி பகுதியில் நேற்று இரவு இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றது. குறித்த விபத்தின் போது பிரதான வீதியால் பயணம் செய்த மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, கார் என்பனவே சேதமடைந்துள்ளன.

குறுக்கு வீதி ஒன்றின் ஊடாக பயணம் செய்த முச்சக்கரவண்டி பிரதான வீதியினை கடக்கும் போதே விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி பிரதான வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற இளைஞன் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

அத்துடன் பிரதான வீதியினால் சென்ற மற்றுமொரு முச்சக்கரவண்டி மற்றும் கார் என்பன பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர், கல்முனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம்