அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்றதன் பின்னர் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1619 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரையில் கொரோனாவால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.