15 ஆயிரம் பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றினால் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 301 பேராக உயர்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் மாத்திரம் 17 ஆயிரத்து 296 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 90 ஆயரத்து 401 ஆக பதிவாகியுள்ளது.