வாட்ஸ்அப் நடவடிக்கையால் டிரெண்ட் ஆகும் சிக்னல் மற்றும் டெலிகிராம்

வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

 

 

பிரைவசி மாற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதோடு சிக்னல் செயலியின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதகரிப்பதாக கூறப்படுகிறது.

 

 டெலிகிராம்

 

இதனை உறுதிப்படுத்தும் வகையில், சிக்னல் செயலி இந்தியா, ஆஸ்த்ரியா, பின்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோரின் முன்னணி இலவச செயலிகள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. 

 

அதிகப்படியான டவுன்லோட்களில் சிக்னல் செயலியின் சர்வெர்கள் முடங்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் பயனர்கள் சைன்-இன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவலை சிக்னல் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது.

 

எலான் மஸ்க் மட்டுமின்றி ஆய்வாளரான எட்வர்ட் ஸ்னோடனும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தார். மேலும் தான் சிக்னல் செயலியை பயன்படுத்தி வருவதாக தெகிவித்தார்.