மரண சடங்கில் பங்கேற்ற பெண் ஒருவர் மீது கார் ஏற்றி கொலை செய்த நபர்

மரண சடங்கில் பங்கேற்ற பெண் ஒருவர் மீது கார் ஏற்றி கொலை செய்த நபர்

பெண் ஒருவரை வாகனத்தில் மோதி மரணித்த சம்பவம் மத்துகம வெலிமானான பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் மரண சடங்கொன்றில் பங்கேற்ற இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலில் நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்தே குறித்த பெண் வாகனத்தில் மோதி கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.