ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கை

ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கை

மிலேனியம் சேலன்ச் கோர்பரேஷன் (எம். சி. சி.) ஒப்பந்தம் தொடர்பிலான இறுதிக்கட்ட அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது நேற்றைய தினம் பிரதமரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதன் பின்னரே இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.