வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில்...

வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில்...

பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இதுவரையில், 16 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி, திருகோணமலை மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளன.

இதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அரசாங்க அச்சகமா அதிபர் தெரிவித்துள்ளார்.