மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவத்தின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவத்தின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி

காலமான இலங்கையின் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும், சூரியன் வானொலியின் முதலாவது நிகழ்ச்சி முகாமையாளரும், முன்னாள் ஆலோசகருமான சின்னையா நடராஜசிவத்தின் பூதவுடல் பொறளை பகுதியிலுள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவர் நேற்றிரவு 11.30 அளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து 74 வயதில் காலமானார். அவரின் மறைவை அடுத்து, ஊடகத்துறை சார்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சூரியன் வானொலியின் நிகழ்ச்சி மற்றும் செய்தி பிரிவிவை வடிவமைத்தவர் நடா என அறியப்படும் நடராஜசிவம் ஆவார். சூரியனின் வானொலி 1998 ஆம் ஆண்டு ஆரம்பித்த காலத்தில் முதலாவது முகாமையாளராக கடமையாற்றியதுடன், 2013 ஆம் ஆண்டுவரை ஆலோசராகவும் பணியாற்றினார்.

குறிப்பாக தமிழ், சிங்கள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.காலமான இலங்கையின் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும், சூரியன் வானொலியின் முதலாவது நிகழ்ச்சி முகாமையாளரும், முன்னாள் ஆலோசகருமான சின்னையா நடராஜசிவத்தின் இறுதிக் கிரியைகள் பொறளை பொது இந்து மையானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.