கழுத்து முறிக்கப்பட்டு ஒருவர் கொலை: கிளிநொச்சியில் துயரம்

கழுத்து முறிக்கப்பட்டு ஒருவர் கொலை: கிளிநொச்சியில் துயரம்

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன்- கட்ட சோலை மாதிரி கிராம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் (வயது - 32) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும் கால் பகுதியில் வெட்டுக்காய்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும், சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.