நல்லடக்கமா..? தகனமா...? 30 ஆம் திகதி அறிவிக்கப்படும்..!

நல்லடக்கமா..? தகனமா...? 30 ஆம் திகதி அறிவிக்கப்படும்..!

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அது குறித்த வழக்கு இன்றைய தினம் வத்தளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே அந்த அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சடலங்கள் அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்பது தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி தீர்மானிக்க திகதியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 4 கைதிகளின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை நிறைவடைந்து அவை தகனம் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் மூன்று கைதிகளின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன் அவர்களில் 8 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானமை குறிப்பிடத்தக்கது.