வெடித்துச் சிதறிய விமானம் தொடர்பில் வெளியான அறிக்கை!

வெடித்துச் சிதறிய விமானம் தொடர்பில் வெளியான அறிக்கை!

பாகிஸ்தானில் கடந்த மாதம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாகூர் நகரிலிருந்து 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 99 பேருடன் பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தின் பிகே 8303 என்ற விமானம் கராச்சி நகருக்கு கடந்த மாதம் 22ம் திகதி புறப்பட்டது.

விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க சில நிமிடங்கள் இருந்தபோது கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தின் தகவல் துண்டிக்கப்பட்டது.