வாரஇறுதி தரவுகளை அடிப்படையாக வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை- இராணுவதளபதி

வாரஇறுதி தரவுகளை அடிப்படையாக வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை- இராணுவதளபதி

வாரஇறுதியில் கிடைக்கின்ற தரவுகளை அடிப்படையாக வைத்தே பண்டிகை காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் ஊரடங்கு உத்தரவினை விதிப்பதுதொடர்பிலோ அல்லது தனிமைப்படுத்தல்களை முன்னெடுப்பது தொடர்பிலோ அதிகாரிகள் எந்த முடிவையும் எடுக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு ஆதரவு வழங்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ள இராணுவதளபதி பண்டிகை காலத்தின் போது மேல்மாகாணத்திலிருந்து வெளியேறுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும வேண்டுகோள் விடுத்துள்ளார்.