800 வருடங்களின் பின் நாளை இடம்பெறவுள்ள அதிசயம்!

800 வருடங்களின் பின் நாளை இடம்பெறவுள்ள அதிசயம்!

நாளை இரவு வானத்தில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள வாய்ப்புள்ளதாக வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.

800 வருடங்களுக்கு ஒரு தடவையே இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன.

இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை அவதானிக்க முடியும்.

இதன்படி நாளை வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்களே இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன.

இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.